சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பணிகளை முடிக்காமல்  திருச்சி, புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கம் வசூலிக்க கூடாது

திருச்சி, புதுக்கோட்டை, தேவக்கோட்டை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 210) பணிகளை முடிக்காமல்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:35 pm

திருச்சி, புதுக்கோட்டை, தேவக்கோட்டை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 210) பணிகளை முடிக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்குழுவின் பொதுச்செயலர் க. வேழவேந்தன், தஞ்சையிலுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:

திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை (210)யை அகலப்படுத்தியதுடன், இருவழிப் போக்குவரத்தையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. இத்தடுப்புச் சுவர் கட்டப்படாவிட்டால், விபத்துகள் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இத்தடத்தில் மாத்தூர் மற்றும் நமணசமுத்திரம் ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, இருவழிப் போக்குவரத்துக்காக சாலையைப் பிரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்கும் வரை கட்டணம் வசூலிக்க கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.