திருச்சி, புதுக்கோட்டை, தேவக்கோட்டை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 210) பணிகளை முடிக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்குழுவின் பொதுச்செயலர் க. வேழவேந்தன், தஞ்சையிலுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:
திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை (210)யை அகலப்படுத்தியதுடன், இருவழிப் போக்குவரத்தையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. இத்தடுப்புச் சுவர் கட்டப்படாவிட்டால், விபத்துகள் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இத்தடத்தில் மாத்தூர் மற்றும் நமணசமுத்திரம் ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, இருவழிப் போக்குவரத்துக்காக சாலையைப் பிரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்கும் வரை கட்டணம் வசூலிக்க கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

